முகப்பு அரசியல் கொரோனா பாதிப்பு: அவசரகால திட்டம் வகுக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கொரோனா பாதிப்பு: அவசரகால திட்டம் வகுக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!

தேசிய அளவிலான கொரோனா பாதிப்பு குறித்த மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,10,129 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இறப்பின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்தநிலையில், தேசிய அளவிலான கொரோனா பாதிப்பு தொடர்பாக மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமரின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால திட்டத்தை வகுக்க வேண்டும். மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்து புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

கிரிக்கெட்: ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித்!

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில்...

கிரிக்கெட்: நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றிகள் மேலும் மேலும் குறைய வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது...

தென் மாவட்டங்களுக்கு கனமழை!

புரவி புயல் காரணமாக நாளை மாலை வரை தென் மாவட்டங்களான குமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய...

புரவி புயல்: முதல்வருடன் பிரதமர் பேச்சு!

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இரு மாநில முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் விவரம் கேட்டறிந்தார் வங்கக்கடலில்...

Recent Comments